இந்தியாவில் முதன்முறையாக ராயல் கேர் மருத்துவமனையில் "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" ஆஸ்துமா சிகிச்சை

தமிழகத்தில் பஞ்சாலை தொழில் நகரமாக விளங்கும் கோவை மாநகரத்தில் ஆஸ்துமா நோயினால் ஏராளமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை இந்த மூச்சுக்குழாய் பாதிப்புக்கு இன்ஹேலர் மூலம் உறிஞ்சப்படும் மருந்துகளை கொண்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நெபுலைசர், ஸ்டெராய்டு மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நுரையீரலின் தசைகள் 50 சதவிகிதத்திற்கு மேல் சுருங்கும் பொழுது மூச்சு இளைப்பு நோயாக மாறுகிறது. தற்பொழுது அதிநவீன நுரையீரல் சிகிச்சை முறையான "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" என்ற சிகிச்சை முறையானது இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அமைந்துள்ள ராயல் கேர் உயர்சிகிச்சை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறையில் குறைந்த அளவே மயக்க மருந்து செலுத்தப்படும். ஒரு சிறிய குழாய் மூச்சு குழாயில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக கதீட்டர் செலுத்தப்பட்டு வெப்ப நீக்கம் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வெப்ப நீக்கத்தின் மூலம் வீக்கம் அடைந்துள்ள நுரையீரலின் தசைப்பகுதிகள் சரிசெய்யப்படுகிறது. இந்த நுரையீரல் இடையீட்டு சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோய் பாதிப்பு, அவசர சிகிச்சை மற்றும் மருந்துகளின் தேவைகளை வெகுவாக குறைக்கப்படுகிறது. 

இந்த நவீன சிகிச்சை முறையை ராயல் கேர் உயர்சிறப்பு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறையின் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் பட்டாபிராமன், மஹாதேவன் மற்றும் அர்ஜூன் ஸ்ரீனிவாசன் ஆகியோரால் திறம்பட மேற்கொள்ளப்படுகிறது.



இதுகுறித்து ராயல் கேர் மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் கே.மாதேஸ்வரன் கூறுகையில், இந்த அதிநவின இடையீட்டு நுரையீரல் சிகிச்சை முறையானது எங்களது மருத்துவமனையில் கையாளப்படும் உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை முறைகளுடன் இணைந்து மேலும் சிறப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறப்பான எளிமையான வைத்திய முறையில் நிவாரணம் பெற வழிவகை செய்கிறது" என தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...